வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் கலக்கி வருபவர் தான் பிரஜின். முதன் முதலில் இவர் 2006 ஆம் ஆண்டு வெளிவந்த டிஷூம் என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார் அவை சா பூ திரி, மணல் நகரம், பழைய வண்ணார் பேட்டை, ஆண்தேவதை போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார்.வேறு மொழியில் கிடைத்த வாய்ப்பையையும் சரியாக பயன்படுத்தியுள்ளார். இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் மலையாளத்திலும் பல படங்களில் நடித்திருக்கிறார்.
மக்கள் மத்தியில் பிரபலம் ஆனதால் இவர் மலையாளத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் வெளிவந்து இருந்த “லவ் ஆக்சன் டிராமா” என்ற படத்தில் இரண்டாவது ஹீரோவாக நடித்திருந்தார். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. இப்படி என்னதான் வெள்ளித்திரையில் பல படங்களில் நடித்து இருந்தாலும் இவரை பிரபலமாக்கியது சின்னத்திரை சீரியல்கள் தான். இவர் 2005ஆம் ஆண்டு வெளிவந்த இது ஒரு காதல் கதை என்ற சிறிய மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து ப்ரஜின் பெண், அஞ்சலி, காதலிக்க நேரமில்லை, கோகுலத்தில் சீதை போன்ற பல தொடர்களில் நடித்து இருந்தார்.
இந்த காலம் நாடகம் நடிப்பவர்களுக்கு நல்ல பெயர் மக்களிடையே உள்ளது. இவரின் சீரியலில் கதாநாயகியாக சரண்யா நடித்து வருகிறார். மாறுபட்ட கதைக்களம் கதை கொண்ட இந்த சீரியல் மக்களின் மத்தியில் ஆதரவை பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த சீரியலில் இருந்து ப்ரஜின் விலகி இருப்பதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து ப்ரஜின் கூறியிருப்பது, சீரியலில் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்று எண்ணி தான் கமிட்டானேன். ஆனால், பட வாய்ப்புகள் பல வந்து இருக்கிறது. அதனால் சீரியலில் தொடர்ந்து நடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ப்ரஜின் பெண், அஞ்சலி, காதலிக்க நேரமில்லை, கோகுலத்தில் சீதை போன்ற பல தொடர்களில் நடித்து இருந்தார். இப்படி ஒரு நிலையில் பிரஜனுக்கு பதில் சீரியல் நடிகர் முன்னா கமிட் ஆகி இருக்கிறார். சன் டிவியின் சந்திரலேகா தொடரில் நடித்த விஜய் விஜய் டிவியின் ராஜ பார்வை தொடரிலும் நடித்துள்ளார். கடந்த மார்ச் 2021 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த தொடர் டிசம்பர் மாதம் திடீரென்று நிறுத்தப்பட்டது.இவரை பாக்கலாம் வாங்க..வைதேகி காத்திருந்தாள் தொடரில் இருந்து விலகிய பிரஜன், அவருக்கு பதில் நடிக்க வந்த சன் டிவி சீரியல் நடிகர் யார்??தெரியுமா